கோவை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு: பால் பாக்கெட்டுகள் உடைந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை..!

ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் கோவை ஆர்.எஸ்.புரம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆவின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எவ்வாறு பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது, மற்றும் பேக்கிங் முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். பால் பாக்கெட்டுகள் உடைந்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை ஆர் எஸ் புரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, சுந்தரேசன் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஆவின் சார்பில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் உடைந்து வந்ததால், முகவர்கள் நஷ்டமடைந்து உள்ளனர்.

ஒரு சில பாக்கெட்டுகளில் ஓட்டை ஏற்பட்டு குறைவான பாலோடும், ஒரு சில இடங்களில் காலி கவர்களாவும் வந்துள்ளது. குறிப்பாக 150-லிட்டர் பாலில், 25-லிட்டர் வீணாகி உள்ளது. இதனால் முகவர்களின் முதலீடு பணத்திலேயே நஷ்டம் ஏற்படும் நிலையில், இது குறித்து, ஆவின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் புகார் அளித்தது.

அதில் முறையாகப் பால் விநியோகம் செய்யமல், எதில் ஊழல் செய்யலாம் என அதிகாரிகள் காத்திருப்பதாகவும், இதனால் முகவர்கள் மட்டுமின்றி ஆவின் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் இன்று காலை முதல் கோவை ஆர்.எஸ்.புரம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆவின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். எவ்வாறு பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது, மற்றும் பேக்கிங் முறைகளை ஆய்வு செய்தனர். மேலும் முறையாகக் கண்காணிக்கவும் அதிகாரிக்கு உத்தர விட்டுச் சென்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...