பூங்கா மேம்பாடு: வார்டு 22 யில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச் செயலாளர் ஆய்வு..!

கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அரசுப் பணியாளர் நகர், பூங்கா நகர், சிவராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா மேம்பாடு மற்றும் மரங்கள் சீரமைப்பு குறித்து திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச் செயலாளர், மணிசுந்தர் உள்ளிட்டோர் இன்றுஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அரசுப் பணியாளர் நகர், பூங்கா நகர், சிவராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா மேம்பாடு மற்றும் மரங்கள் சீரமைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

22வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி, பூங்காக்கள் குழு உறுப்பினராக உள்ள கோவை பாபு, வேண்டுகோளுக்கிணங்க, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச்செயலாளர் மணிசுந்தர் மற்றும் அருளகம் கானுயிர் அறக்கட்டளையின் நிறுவனர், சூழல் ஆர்வலர் ஆய்வாளர் சு. பாரதிதாசன் உள்ளிட்டோர் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்தனர்.



கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல நூறு குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதனால், ரிசர்வ் சைட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காக்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, இயற்கை சூழலை மேம்படுத்த மரங்கள் நடுவது, நடைப்பாதை அமைப்பது, குழந்தைகள் விளையாட இடம் போன்ற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, அரசுப்பணியாளர் நகர் நலச் சங்கத்தினர், சிவராம் நகர் நலச் சங்கத்தினர் மற்றும் திமுக கட்சியினர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...