கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அரசுப் பணியாளர் நகர், பூங்கா நகர், சிவராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா மேம்பாடு மற்றும் மரங்கள் சீரமைப்பு குறித்து திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச் செயலாளர், மணிசுந்தர் உள்ளிட்டோர் இன்றுஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அரசுப் பணியாளர் நகர், பூங்கா நகர், சிவராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா மேம்பாடு மற்றும் மரங்கள் சீரமைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
22வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி, பூங்காக்கள் குழு உறுப்பினராக உள்ள கோவை பாபு, வேண்டுகோளுக்கிணங்க, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச்செயலாளர் மணிசுந்தர் மற்றும் அருளகம் கானுயிர் அறக்கட்டளையின் நிறுவனர், சூழல் ஆர்வலர் ஆய்வாளர் சு. பாரதிதாசன் உள்ளிட்டோர் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்தனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல நூறு குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதனால், ரிசர்வ் சைட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காக்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, இயற்கை சூழலை மேம்படுத்த மரங்கள் நடுவது, நடைப்பாதை அமைப்பது, குழந்தைகள் விளையாட இடம் போன்ற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, அரசுப்பணியாளர் நகர் நலச் சங்கத்தினர், சிவராம் நகர் நலச் சங்கத்தினர் மற்றும் திமுக கட்சியினர் உடன் இருந்தனர்.
22வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி, பூங்காக்கள் குழு உறுப்பினராக உள்ள கோவை பாபு, வேண்டுகோளுக்கிணங்க, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச்செயலாளர் மணிசுந்தர் மற்றும் அருளகம் கானுயிர் அறக்கட்டளையின் நிறுவனர், சூழல் ஆர்வலர் ஆய்வாளர் சு. பாரதிதாசன் உள்ளிட்டோர் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்தனர்.
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல நூறு குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதனால், ரிசர்வ் சைட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காக்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, இயற்கை சூழலை மேம்படுத்த மரங்கள் நடுவது, நடைப்பாதை அமைப்பது, குழந்தைகள் விளையாட இடம் போன்ற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, அரசுப்பணியாளர் நகர் நலச் சங்கத்தினர், சிவராம் நகர் நலச் சங்கத்தினர் மற்றும் திமுக கட்சியினர் உடன் இருந்தனர்.