கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஜெயலலிதா கார் ஓட்டுநர் கண்ணனிடம் நடந்த 2 ஆம் நாள் விசாரணை நிறைவு…!

இன்று காலை 10 மணியளவில் துவங்கிய விசாரணை, சுமார் 9 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்து. மீண்டும் கண்ணனை விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கண்ணனிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரது உறவினர்கள் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, அவரது கார் ஓட்டுநர். மற்றும் சஜீவன் மற்றும் கோடநாடு பங்களாவில் பணியாற்றிய ஊழியர்கள், மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 250 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் மூன்று முறை விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நீண்டகால கார் ஓட்டுநராக இருந்த கண்ணனிடம் தனிப்படை போலீசார் கடந்த 2 தினங்களாக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இரண்டாம் நாள் விசாரணை இன்று காலை 10 மணியளவில் துவங்கியது. சுமார் 9 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு 7.30 மணியளவில் விசாரணை நிறைவடைந்து, கண்ணன் அங்கிருந்து புறப்பட்டார். மீண்டும் அவரை விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் நாட்களில், கோடநாடு வழக்கில் தொடர்புடைய மேலும் பல்வேறு நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...