கோவை சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த வழக்கு - அரசு பேருந்து ஓட்டுநருக்கு 2.6 ஆண்டு சிறை…!

2015 ஆம் ஆண்டு ஏற்படுத்திய விபத்தின் விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி சரவணபாபு, விபத்தை ஏற்படுத்திய கூடலூரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் 2015 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நிறை மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம், நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், ஒன்பது மாத கர்ப்பிணியான தனது மனைவி சரஸ்வதியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள காவல் சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனம் வந்த போது, கோவையிலிருந்து சோமனூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நிறை மாத கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் படுகாயமடைந்தனர். இருவரும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சரஸ்வதியின் நிலைமை மோசமடைந்ததால், மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றினார்.

விபத்து தொடர்பாக, மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரமேஷ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கை இறுதிகட்டமாக விசாரித்த நீதிபதி சரவணபாபு, விபத்தை ஏற்படுத்திய நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி குழந்தையை பெற்றுவிட்டு, உயிரிழந்த சம்பவத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...