போக்ஸோ சட்டம்: விழிப்புணர்வு மற்றும் கையாலும் நுணுக்கங்கள் குறித்து காவல் துறையினருக்கு விரிவுரை விளக்க கூட்டம்

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவிடும் வழக்குகளின் புலன் விசாரணையின் போது, போலீசார் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.


கோவை: காவல் துறையினருக்கு, போக்ஸோ சட்டம் குறித்த சிறப்பு விரிவுரை வழங்க வேண்டும், என கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் (POCSO Act) குறித்து கோவை மாநகரில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்ற விரிவாக்க கூட்டம் நடைபெற்றது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவிடும் வழக்குகளின் புலன் விசாரணையின் போது, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.



மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பந்தமான வழக்குகளில், சட்டப்பிரிவுகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் போக்ஸோ சட்டத்தின் நுணுக்கங்கள், அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தார்.

இந்த சிறப்பு விரிவுரையானது, பங்கேற்ற பெண் காவலர்கள் உட்பட அனைத்து காவலர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருந்தது என்றும்

போக்ஸோ வழக்கு குறித்த தங்களுக்கு இருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்தது என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...