போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவிடும் வழக்குகளின் புலன் விசாரணையின் போது, போலீசார் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
கோவை: காவல் துறையினருக்கு, போக்ஸோ சட்டம் குறித்த சிறப்பு விரிவுரை வழங்க வேண்டும், என கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் (POCSO Act) குறித்து கோவை மாநகரில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்ற விரிவாக்க கூட்டம் நடைபெற்றது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவிடும் வழக்குகளின் புலன் விசாரணையின் போது, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பந்தமான வழக்குகளில், சட்டப்பிரிவுகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் போக்ஸோ சட்டத்தின் நுணுக்கங்கள், அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இந்த சிறப்பு விரிவுரையானது, பங்கேற்ற பெண் காவலர்கள் உட்பட அனைத்து காவலர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருந்தது என்றும்
போக்ஸோ வழக்கு குறித்த தங்களுக்கு இருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்தது என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர்.
போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவிடும் வழக்குகளின் புலன் விசாரணையின் போது, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பந்தமான வழக்குகளில், சட்டப்பிரிவுகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் போக்ஸோ சட்டத்தின் நுணுக்கங்கள், அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இந்த சிறப்பு விரிவுரையானது, பங்கேற்ற பெண் காவலர்கள் உட்பட அனைத்து காவலர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருந்தது என்றும்
போக்ஸோ வழக்கு குறித்த தங்களுக்கு இருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்தது என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர்.