கோவையில் சமூக ஆர்வலர் தீஸ்தா, ஊடகவியலாளர் சுபைர், ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ்.ஆகியோரது கைதை கண்டித்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஊடகவியலாளர் முஹமத் சுபைர், ஸ்ரீ குமார் ஐபிஎஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


கோவை: பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஊடகவியலாளர் முஹமத் சுபைர், ஸ்ரீ குமார் ஐபிஎஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ், ஊடகவியலாளர் முஹமத் சுபைர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக நாடு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.



இதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காந்திநகர், குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து இது போன்ற அடக்கு முறைகளை ஏவி விடும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இது போன்ற சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர் கைது நடவடிக்கைகளால் அடக்குமுறையை ஏவி விடும் மத்திய பா.ஜ.க விற்கு எதிராக இந்த கண்டன போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.



இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...