பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஊடகவியலாளர் முஹமத் சுபைர், ஸ்ரீ குமார் ஐபிஎஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை: பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஊடகவியலாளர் முஹமத் சுபைர், ஸ்ரீ குமார் ஐபிஎஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ், ஊடகவியலாளர் முஹமத் சுபைர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக நாடு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காந்திநகர், குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து இது போன்ற அடக்கு முறைகளை ஏவி விடும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இது போன்ற சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர் கைது நடவடிக்கைகளால் அடக்குமுறையை ஏவி விடும் மத்திய பா.ஜ.க விற்கு எதிராக இந்த கண்டன போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ், ஊடகவியலாளர் முஹமத் சுபைர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து SDPI கட்சியின் சார்பாக நாடு எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காந்திநகர், குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து இது போன்ற அடக்கு முறைகளை ஏவி விடும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இது போன்ற சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர் கைது நடவடிக்கைகளால் அடக்குமுறையை ஏவி விடும் மத்திய பா.ஜ.க விற்கு எதிராக இந்த கண்டன போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.