கோவையில் ஓரின சேர்க்கைக்கு அழைத்தவர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!

கோவையில் ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதியரசர் டி.பாலு தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதியரசர் டி.பாலு தீர்ப்பளித்தார்.

கோவை தடாகம் சாலை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் வெளியே சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது கோவையை சேர்ந்த ரைசா என்ற திருநங்கையை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரைசா செல்வபுரம் அடுத்த பனைமரத்தூர் பகுதியில் உள்ள தனது நண்பராகிய மஞ்சு என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இதனால் ரைசாவை பார்க்க வரும் ரமேஷ் அடிக்கடி பனைமரத்தூர் வந்து அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் தினமும் உறங்கி வந்ததாக தெரிகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த திருப்பூர் தனியார் வங்கி உதவி பணியாளர் கவின் மூர்த்தி (27) என்பவர் பழக்கமாகி உள்ளார். இருவரும் மது குடித்து விட்டு அதே கோவிலில் இரவு நேரத்தில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஜூலை 7ஆம் தேதி கோவில் வளாகத்தில் இருந்த போது, கவின் மூர்த்தியை ரமேஷ் ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கவின் மூர்த்தி, ரமேஷை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து செல்வபுரம் போலீசார் கவின் மூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து இதில் கவின் மூர்த்தி குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்தும் நீதியரசர் டி.பாலு தீர்ப்பளித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...