கோவையில் இரண்டாவது கந்துவட்டி வழக்குப்பதிவு - இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற கந்துவட்டிக்காரர் கைது!

கோவையில் வட்டி தொகை போக கூடுதலாக வட்டி கொடுக்க வேண்டும் என்று மிரட்டியவர் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் வட்டி தொகை போக கூடுதலாக வட்டி கொடுக்க வேண்டும் என்று மிரட்டியவர் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா மற்றும் கலைவாணி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு கிருஷ்ணசாமிபுரத்தை சேர்ந்த பூபதி சிவராஜ் (25) என்பவரிடம் வட்டிக்கு ரூ.17,500 வாங்கியுள்ளனர். இந்த தொகையை கலைவாணி ஒவ்வொரு மாதமும் ரூ.2,300 என்ற கணக்கில் கொடுத்து கழித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் கலைவாணியின் வீட்டிற்கு சென்ற பூபதி சிவராஜ் கடன் தொகை போக கூடுதலாக ரூ.2,300 வட்டித் தொகை கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை பூபதி எடுத்து வந்துள்ளார்.

மேலும் அடிக்கடி கலைவாணியிடம் வட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து கலைவாணி கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பூபதி மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆபரேஷன் கந்துவட்டி அமலான பிறகு இரண்டாவது கந்துவட்டி வழக்கை கோவை போலீசார் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...