கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி எஸ்.டி.பி.ஐ சாலை மறியல் - போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.


கோவை: கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. ஆனால், தற்போது வரையில் பணிகள் முடிக்கப்படவில்லை. மந்த நிலையில் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.



ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி, ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அடுத்தடுத்து குனியமுத்தூர், சுந்தராபுரம் செல்லும் சாலையில் 4 இடங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.



இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...