கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி எஸ்.டி.பி.ஐ சாலை மறியல் - போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு!

கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.


கோவை: கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. ஆனால், தற்போது வரையில் பணிகள் முடிக்கப்படவில்லை. மந்த நிலையில் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.



ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி, ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அடுத்தடுத்து குனியமுத்தூர், சுந்தராபுரம் செல்லும் சாலையில் 4 இடங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.



இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...