கோவையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை 184 பேர் கைது - 40 வங்கி கணக்குகள் முடக்கம்!

கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக, கோவை தெற்கு மண்டலத்தில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல வடக்கு மண்டலத்தில் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போதை பொருட்கள் விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 35 பேரின் 40 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...