பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம்..!

சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையே மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி போத்தனூர் வழி தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்தது மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பழனி வரையில் மின்மயமாக்கல் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக மதுரையில் இருந்து பழனி வந்த பயணிகள் ரயிலில் பொருத்தி இருந்த டீசல் இன்ஜின் மாற்றம் செய்து, மின்சார ரயில் என்ஜின் பொருத்தப்பட்டு, காலை 10.40 மணிக்கு பயணிகளுடன் ரயில் புறப்பட்டது, பின் 12 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைந்தது.



12.5 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து கோவை புறப்பட்டது. சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...