சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையே மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சி போத்தனூர் வழி தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்தது மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பழனி வரையில் மின்மயமாக்கல் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக மதுரையில் இருந்து பழனி வந்த பயணிகள் ரயிலில் பொருத்தி இருந்த டீசல் இன்ஜின் மாற்றம் செய்து, மின்சார ரயில் என்ஜின் பொருத்தப்பட்டு, காலை 10.40 மணிக்கு பயணிகளுடன் ரயில் புறப்பட்டது, பின் 12 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைந்தது.

12.5 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து கோவை புறப்பட்டது. சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையே மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.
இதில், பொள்ளாச்சி போத்தனூர் வழி தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்தது மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பழனி வரையில் மின்மயமாக்கல் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக மதுரையில் இருந்து பழனி வந்த பயணிகள் ரயிலில் பொருத்தி இருந்த டீசல் இன்ஜின் மாற்றம் செய்து, மின்சார ரயில் என்ஜின் பொருத்தப்பட்டு, காலை 10.40 மணிக்கு பயணிகளுடன் ரயில் புறப்பட்டது, பின் 12 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைந்தது.
12.5 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து கோவை புறப்பட்டது. சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.