பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம்..!

சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையே மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி போத்தனூர் வழி தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்தது மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பழனி வரையில் மின்மயமாக்கல் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக மதுரையில் இருந்து பழனி வந்த பயணிகள் ரயிலில் பொருத்தி இருந்த டீசல் இன்ஜின் மாற்றம் செய்து, மின்சார ரயில் என்ஜின் பொருத்தப்பட்டு, காலை 10.40 மணிக்கு பயணிகளுடன் ரயில் புறப்பட்டது, பின் 12 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைந்தது.



12.5 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து கோவை புறப்பட்டது. சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...