கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் கடும் துர்நாற்றம்; நோய் பரவும் அபாயம்..!

நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்யும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடம் பின்புறம் உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் அருகில் இரண்டு குப்பை தொட்டிகள் உள்ளன. ஆனால் குப்பை தொட்டியில் போடப்படும் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

பெரும்பாலும் இந்த பழைய கட்டிடத்தில் ஏதேனும் அரசு நிகழ்ச்சிகள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தால் மட்டுமே குப்பைகள் அகற்றப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் போது அன்றோ அல்லது அதற்கு மறு நாள் தான் குப்பைகள் அகற்றப்படுகின்றன.



பின்பு மீண்டும் குப்பைகள் அகற்றப்படாமலேயே உள்ளது. அதே போல் அதன் அருகில் உள்ள கழிவு நீர் குழாயும் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும், பழைய கட்டிடத்தில் உள்ள பொது கழிப்பறைகளும் முறையாக சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது.



இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்யும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...