கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் கடும் துர்நாற்றம்; நோய் பரவும் அபாயம்..!

நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்யும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடம் பின்புறம் உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் அருகில் இரண்டு குப்பை தொட்டிகள் உள்ளன. ஆனால் குப்பை தொட்டியில் போடப்படும் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.

பெரும்பாலும் இந்த பழைய கட்டிடத்தில் ஏதேனும் அரசு நிகழ்ச்சிகள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தால் மட்டுமே குப்பைகள் அகற்றப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் போது அன்றோ அல்லது அதற்கு மறு நாள் தான் குப்பைகள் அகற்றப்படுகின்றன.



பின்பு மீண்டும் குப்பைகள் அகற்றப்படாமலேயே உள்ளது. அதே போல் அதன் அருகில் உள்ள கழிவு நீர் குழாயும் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும், பழைய கட்டிடத்தில் உள்ள பொது கழிப்பறைகளும் முறையாக சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது.



இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்யும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...