தனது வீட்டின் முன்பு உள்ளதாக கூறி, கடப்பாரையை கொண்டு அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து கேட்ட ஊராட்சி செயலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
கோவை: கோவை வரதனூர் ஊராட்சி செங்குட்டைபாளையம் அருகே பேருந்து நிழற்குடையை உடைத்து சேதப்படுத்தியவருக்கு 1-ஆண்டு சிறை ரூ.2-ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை வரதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குட்டைபாளையம் கிராமத்தில் இருந்த பேருந்து நிழற்குடையை சந்திரமூர்த்தி (53), என்பவர் அடித்து உடைத்துள்ளார்.
தனது வீட்டின் முன்பு உள்ளதாக கூறி, கடப்பாரையை கொண்டு அடித்து உடைத்துள்ளார். இது குறித்து கேட்ட ஊராட்சி செயலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் சந்திர மூர்த்திக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை வரதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குட்டைபாளையம் கிராமத்தில் இருந்த பேருந்து நிழற்குடையை சந்திரமூர்த்தி (53), என்பவர் அடித்து உடைத்துள்ளார்.
தனது வீட்டின் முன்பு உள்ளதாக கூறி, கடப்பாரையை கொண்டு அடித்து உடைத்துள்ளார். இது குறித்து கேட்ட ஊராட்சி செயலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் சந்திர மூர்த்திக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.