கோவை சிங்காநல்லூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் - முறையாக புகார் பெற்று விசாரிக்காததால் நடவடிக்கை..!

புகாரை முறையாகப் பெற்று விசாரிக்காத சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் கமிஷனர் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தற்கொலைக்கு முயன்ற நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



கோவை: கோவையில் புகாரை முறையாக விசாரிக்காத காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை இருகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். தற்போது வேலை இல்லாமல் மன உலைச்சலிலிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டின் அருகே வசித்து வரும் நபருடன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கிருஷ்ணன் கோவை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் புகாரை பெறாமல் அலட்சியப்படுத்தியதாக கூறி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்குப் புகார் அளிக்க வந்தார்.

அப்போது வீட்டிலிருந்து வரும் போதே சாணி பவுடரை குடித்து வந்ததால்உடல்நலம் குன்றிய நிலையில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் சாணிபவுடர்குடித்து விட்டு அங்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், புகார் அளித்தும் முறையாக விசாரிக்காமல் அலட்சியப்படுத்தியதாகவும், இதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, புகாரை முறையாகப் பெற்று விசாரிக்காத சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் கமிஷனர் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற கிருஷ்ணன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...