தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி..!

சிறப்பு குழந்தைகளின் மேடை பயத்தை போக்கும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேலும் வளர்க்கவும், திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



பெரும்பாலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு திறன்களை பெற்று விளங்குகின்றனர்.

இவ்வாறான, குழந்தைகளுக்கு முறையான பயிற்சி அளிக்கும் பொழுது அவர்கள் மற்றவர்களுடன் சாதாரணமாக பழகும் சூழல் ஏற்படுகிறது.

இந்த சிறப்பு குழந்தைகளின் மேடை பயத்தை போக்கும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேலும் வளர்க்கவும், திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சாய் கிருபா சிறப்பு பள்ளியும், கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியும் பங்கேற்றன.

இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஏராளமான சிறப்பு குழந்தைகள் புதுவிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளையின் நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் மற்றும் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



இந்த நிகழ்ச்சியில், சிறப்பு குழந்தைகள் பல்வேறு விதமான ஆடைகளை அணிந்து அணிவகுத்து வந்தது காண்போரை கவரும் வகையில் இருந்தது. இதனிடையே, இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பாக ரூ.14,000 காசோலை சாய் கிருபா சிறப்பு பள்ளி மற்றும் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளிக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...