சிறுவாணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, கோவை குற்றாலம் அருகே சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காளிதாசனை வழிமறித்து தாக்கியது.
கோவை: கோவை குற்றாலம் சர்க்கர் போரத்தி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்ற குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிறுவாணி அடிவாரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாசன் (59). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஷீபா (49). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சிறுவாணி குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் இருந்து காளிதாசன் மற்றும் ஷீபா ஆகிய இருவரும் கோவை குற்றாலம் அருகே உள்ள மலையோர கிராமத்திற்கு வந்தனர். பின்னர், அங்கு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி கோவை டவுன்ஹால் பகுதிக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சென்றதாக தெரிகிறது.
பின்னர், மீண்டும் சிறுவாணி செல்லும் பேருந்தில் ஏறி கோவை குற்றாலம் வந்து போது, ஷீபாவை பேருந்திலேயே செல்ல அறிவுறுத்திய காளிதாசன், அங்கு நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தில் சிறுவாணி நோக்கி சென்றுள்ளார். அப்போது கோவை குற்றாலம் அருகே உள்ள சர்க்கார் போரத்தி அருகே வந்த போது, சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காளிதாசனை வழிமறித்து தாக்கியது.

தகவலறிந்து அங்கு வந்த உடனடியாக வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர், உயிருக்கு போராடி கொண்டிருந்த காளிதாசனை மீட்டு காருண்யா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிறுவாணி அடிவாரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாசன் (59). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஷீபா (49). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சிறுவாணி குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் இருந்து காளிதாசன் மற்றும் ஷீபா ஆகிய இருவரும் கோவை குற்றாலம் அருகே உள்ள மலையோர கிராமத்திற்கு வந்தனர். பின்னர், அங்கு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி கோவை டவுன்ஹால் பகுதிக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சென்றதாக தெரிகிறது.
பின்னர், மீண்டும் சிறுவாணி செல்லும் பேருந்தில் ஏறி கோவை குற்றாலம் வந்து போது, ஷீபாவை பேருந்திலேயே செல்ல அறிவுறுத்திய காளிதாசன், அங்கு நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தில் சிறுவாணி நோக்கி சென்றுள்ளார். அப்போது கோவை குற்றாலம் அருகே உள்ள சர்க்கார் போரத்தி அருகே வந்த போது, சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காளிதாசனை வழிமறித்து தாக்கியது.
தகவலறிந்து அங்கு வந்த உடனடியாக வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர், உயிருக்கு போராடி கொண்டிருந்த காளிதாசனை மீட்டு காருண்யா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.