'கொள்ளை போகும் கனிம வளம்' - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகிற கும்பல்களை கைது செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் இடிக்கப்பட்ட தாட்கோ கடைகளை மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே கட்டிதர வேண்டும். அதே போல் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மெட்ராத்தி கிராமத்தில் கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகிற கும்பல்களை கைது செய்ய வேண்டும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தலித் விடுதலை கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதற்கு மாநில பொதுச்செயலாளர் செங்கோட்டையன் கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ், மாநில செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...