கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகிற கும்பல்களை கைது செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் இடிக்கப்பட்ட தாட்கோ கடைகளை மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே கட்டிதர வேண்டும். அதே போல் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மெட்ராத்தி கிராமத்தில் கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகிற கும்பல்களை கைது செய்ய வேண்டும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தலித் விடுதலை கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாநில பொதுச்செயலாளர் செங்கோட்டையன் கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ், மாநில செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் இடிக்கப்பட்ட தாட்கோ கடைகளை மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கே கட்டிதர வேண்டும். அதே போல் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மெட்ராத்தி கிராமத்தில் கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகிற கும்பல்களை கைது செய்ய வேண்டும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தலித் விடுதலை கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநில பொதுச்செயலாளர் செங்கோட்டையன் கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ், மாநில செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.