திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயில போதிய இடவசதி இல்லாததால் உடனடியாக பள்ளியை விரிவு படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆனது கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்ட போதிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. குறிப்பாக இந்த பள்ளியில் 20-வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறை இன்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.
போதிய கழிப்பறை வசதிகள் இல்லை, மேலும் ஆய்வகங்கள் கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை செய்து கொடுக்க இந்தப் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.

அங்கு இந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 54-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாசலம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆனது கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்ட போதிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. குறிப்பாக இந்த பள்ளியில் 20-வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறை இன்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.
போதிய கழிப்பறை வசதிகள் இல்லை, மேலும் ஆய்வகங்கள் கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை செய்து கொடுக்க இந்தப் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.
அங்கு இந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 54-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாசலம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.