வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியை விரிவு படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயில போதிய இடவசதி இல்லாததால் உடனடியாக பள்ளியை விரிவு படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆனது கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.



வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியாக, தரம் உயர்த்தப்பட்ட போதிலும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. குறிப்பாக இந்த பள்ளியில் 20-வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறை இன்றி வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர்.

போதிய கழிப்பறை வசதிகள் இல்லை, மேலும் ஆய்வகங்கள் கம்ப்யூட்டர் லேப் போன்ற வசதிகளை செய்து கொடுக்க இந்தப் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது.



அங்கு இந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 54-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அருணாசலம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...