கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை:கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்றிலிருந்து கோவை மாநகராட்சி நிர்வாகமும் அதனை செயல்படுத்த துவங்கியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களும் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் முககவசம் அணிந்து வருமாறு கூறிவருகின்றனர். முககவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நீராபானமும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இன்றிலிருந்து கோவை மாநகராட்சி நிர்வாகமும் அதனை செயல்படுத்த துவங்கியுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களும் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் முககவசம் அணிந்து வருமாறு கூறிவருகின்றனர். முககவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நீராபானமும் விற்பனை செய்யப்படுகிறது.