இரவு நேரத்தில் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வண்ணம் சட்டவிரோதமாக வாகனத்தில் சென்று விலங்குகளை பார்க்க சென்றதால் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 70-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறையில் இரவில் வன விலங்குகளை சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனம் பறிமுதல் 70-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட வால்பாறை பகுதியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இதைப் பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சட்டவிரோதமாக இரவில் சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை பார்க்க தங்கள் சொந்த வாகனங்களிலும் வாடகை கார் களிலும் செல்லுகின்றனர். இது போன்று செயல்களால் வனவிலங்கு மோதல் நடைபெறுகிறது. வன விலங்குகளும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
வனத்துறை தங்கும் விடுதிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இரவில் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வண்ணம் வாகனத்தை செலுத்தவும், அதிக பவர் கொண்ட லைட், மேலும் வன பகுதியில் சத்தம் எழுப்பவும்கூடாது, இதை பின்பற்ற வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதை மீறி வால்பாறையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் இரவில் வன விலங்குகளை பார்க்க செல்கின்றனர். வால்பாறை வன சரகத்தில் கருமலை, அக்கமலை, பச்சமலை, பாரளை, வில்லோனி, போன்ற இடங்களுக்கு நேற்று இரவில் இரண்டு வாகனத்தில்10-க்கும்மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வன விலங்குகளை காண்பிக்க சென்று உள்ளனர்.

இரவு நேரத்தில் வன விலங்குகளைதொந்தரவு செய்யும் வண்ணம் சட்டவிரோதமாகவாகனத்தில் சென்று விலங்குகளை பார்க்க சென்றதால் இரண்டு வாகனங்களைவால்பாறை வனத்துறை சரகர் வெங்கடேஷ் பறிமுதல் செய்தார்.
இரண்டு வாகனங்களுக்கும் டிரைவர் ஜீவா, கலையரசன் ஆகியோர்களுக்கு தலா 25 ஆயிரமும் தனியார் தங்கும் விடுதிக்கு 20 ஆயிரம்மொத்தம் 70 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட வால்பாறை பகுதியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இதைப் பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சட்டவிரோதமாக இரவில் சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை பார்க்க தங்கள் சொந்த வாகனங்களிலும் வாடகை கார் களிலும் செல்லுகின்றனர். இது போன்று செயல்களால் வனவிலங்கு மோதல் நடைபெறுகிறது. வன விலங்குகளும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
வனத்துறை தங்கும் விடுதிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இரவில் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் வண்ணம் வாகனத்தை செலுத்தவும், அதிக பவர் கொண்ட லைட், மேலும் வன பகுதியில் சத்தம் எழுப்பவும்கூடாது, இதை பின்பற்ற வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதை மீறி வால்பாறையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் இரவில் வன விலங்குகளை பார்க்க செல்கின்றனர். வால்பாறை வன சரகத்தில் கருமலை, அக்கமலை, பச்சமலை, பாரளை, வில்லோனி, போன்ற இடங்களுக்கு நேற்று இரவில் இரண்டு வாகனத்தில்10-க்கும்மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வன விலங்குகளை காண்பிக்க சென்று உள்ளனர்.
இரவு நேரத்தில் வன விலங்குகளைதொந்தரவு செய்யும் வண்ணம் சட்டவிரோதமாகவாகனத்தில் சென்று விலங்குகளை பார்க்க சென்றதால் இரண்டு வாகனங்களைவால்பாறை வனத்துறை சரகர் வெங்கடேஷ் பறிமுதல் செய்தார்.
இரண்டு வாகனங்களுக்கும் டிரைவர் ஜீவா, கலையரசன் ஆகியோர்களுக்கு தலா 25 ஆயிரமும் தனியார் தங்கும் விடுதிக்கு 20 ஆயிரம்மொத்தம் 70 ஆயிரம் அபராதம் விதித்தனர்.