கோவையில் வீடு புகுந்து முகத்தில் மிளகாய் பொடி தூவி மூதாட்டியில் 1.5 பவுன் செயின் பறிப்பு…!

கோவை செம்மேடு அருகே வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் முகத்தில், மிளகாய் பொடியை தூவிவிட்டு கழுத்தில் அணிந்த 1.5 பவுன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை:கோவை ஆலந்துறை செம்மேடு சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி ரங்கம்மாள் (75). கணவன் இறந்த பிறகு, ரங்கம்மாள் தனக்கு கிடைக்கும் முதியோர் உதவி தொகையை வைத்தும், கூலி வேலை பார்த்தும் வாழ்ந்து வருகிறார்.

நேற்று இரவு ரங்கம்மாள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்வீட்டின் வெளியே இருந்த இரும்பு கதவை உடைத்து உள்ளே வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த ரங்கம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதையடுத்து, மூதாட்டி ரங்கம்மாள் சத்தம் போடவே, அந்த மர்ம நபர் வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் மூதாட்டி அளித்தபுகாரின் பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே, ரங்கம்மாளை நோட்டமிட்டு அவர் தனியாக இருப்பதை அறிந்த நபர் தான் வீடு புகுந்து செயினை பறித்துச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...