கோவையில் வீடு புகுந்து முகத்தில் மிளகாய் பொடி தூவி மூதாட்டியில் 1.5 பவுன் செயின் பறிப்பு…!

கோவை செம்மேடு அருகே வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் முகத்தில், மிளகாய் பொடியை தூவிவிட்டு கழுத்தில் அணிந்த 1.5 பவுன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை:கோவை ஆலந்துறை செம்மேடு சத்தியமூர்த்தி வீதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி ரங்கம்மாள் (75). கணவன் இறந்த பிறகு, ரங்கம்மாள் தனக்கு கிடைக்கும் முதியோர் உதவி தொகையை வைத்தும், கூலி வேலை பார்த்தும் வாழ்ந்து வருகிறார்.

நேற்று இரவு ரங்கம்மாள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்வீட்டின் வெளியே இருந்த இரும்பு கதவை உடைத்து உள்ளே வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த ரங்கம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதையடுத்து, மூதாட்டி ரங்கம்மாள் சத்தம் போடவே, அந்த மர்ம நபர் வெளியே நிறுத்தி வைத்திருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் மூதாட்டி அளித்தபுகாரின் பேரில்வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே, ரங்கம்மாளை நோட்டமிட்டு அவர் தனியாக இருப்பதை அறிந்த நபர் தான் வீடு புகுந்து செயினை பறித்துச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...