கொரோனா பரவல் எதிரொலி - மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - கோவை ஆட்சியர் உத்தரவு.

பொது இடங்களில், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றுமாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் ஒரு நாள் பாதிப்பு 84 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுபடுத்த, மீண்டும் நோய் தடுப்பு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம்

அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைஅதிகரித்து வருவதால், தினசரி கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல, மாநகராட்சி ஆணையாளர் பிரதீப் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டு முக்கியமான பகுதிகளில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பொது இடங்களில், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...