47-வது ஆண்டு மனித உரிமை இழப்பு நினைவு நாள்: இது ஒரு கொடூரமான நாள்-பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி..!

65-வயதை கடந்தவர்கள் மட்டுமே இந்த தினத்தின் உண்மை நிலையை புரிந்திருக்க முடியும், இந்திய அரசியல் சரித்திரத்தில் இது ஒரு கருப்பு நாள் எனவும், இந்த நாளை கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் சாடினார்.



கோவை: கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள, பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், இன்று 47-வது ஆண்டு மனித உரிமை இழப்பு நினைவு நாள், 47 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எமர்ஜென்சி எனும் அவசர நிலையை இந்திய அரசியலமைப்புச் சட்டம், 352-பிரிவை பயன்படுத்தி அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்து, அதன் மூலமாக இத்தனை ஆண்டுகள் நாம் கட்டி காத்த, பேச்சுரிமை, மனித உரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை இவையெல்லாம் அடித்து நொறுக்கி, அரசியலமைப்பு சட்டத்திற்கு விலக்கு அளிக்க பட்ட ஒரு கொடூரமான நாள் எனவும், தமிழக மக்களுக்கு புரியும் வகையில் கூற வேண்டுமென்றால் 65 வயதை கடந்தவர்கள் மட்டுமே இந்த தினத்தின் உண்மை நிலையை புரிந்திருக்க முடியும்.

அதனை அனுபவித்திருக்க முடியும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிவிப்பது என்றால், கொரோனா என்ற தொற்று பரவி மக்களை எப்படி அச்சுறுத்தியோ, அதே போன்று அரசியலில் நடைபெற்ற நாள் தான் இந்த கொடுங்கோல் நாள் தான் இந்த எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை என்று தெரிவித்தார்.

இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு கருப்பு நாள் எனவும், இந்த நாளை கொண்டு வந்தவர்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர் என்றும் சாடினார். அவர்கள் இன்று மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் என்று கூறிய அவர், இன்று சுதந்திரம் பற்றி அவதூறாக பேசி அரசின் மீது குற்ற சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...