47-வது ஆண்டு மனித உரிமை இழப்பு நினைவு நாள்: இது ஒரு கொடூரமான நாள்-பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி..!

65-வயதை கடந்தவர்கள் மட்டுமே இந்த தினத்தின் உண்மை நிலையை புரிந்திருக்க முடியும், இந்திய அரசியல் சரித்திரத்தில் இது ஒரு கருப்பு நாள் எனவும், இந்த நாளை கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் சாடினார்.



கோவை: கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள, பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், இன்று 47-வது ஆண்டு மனித உரிமை இழப்பு நினைவு நாள், 47 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எமர்ஜென்சி எனும் அவசர நிலையை இந்திய அரசியலமைப்புச் சட்டம், 352-பிரிவை பயன்படுத்தி அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது பிறப்பித்து, அதன் மூலமாக இத்தனை ஆண்டுகள் நாம் கட்டி காத்த, பேச்சுரிமை, மனித உரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, பத்திரிகை சுதந்திரம், நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை இவையெல்லாம் அடித்து நொறுக்கி, அரசியலமைப்பு சட்டத்திற்கு விலக்கு அளிக்க பட்ட ஒரு கொடூரமான நாள் எனவும், தமிழக மக்களுக்கு புரியும் வகையில் கூற வேண்டுமென்றால் 65 வயதை கடந்தவர்கள் மட்டுமே இந்த தினத்தின் உண்மை நிலையை புரிந்திருக்க முடியும்.

அதனை அனுபவித்திருக்க முடியும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிவிப்பது என்றால், கொரோனா என்ற தொற்று பரவி மக்களை எப்படி அச்சுறுத்தியோ, அதே போன்று அரசியலில் நடைபெற்ற நாள் தான் இந்த கொடுங்கோல் நாள் தான் இந்த எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை என்று தெரிவித்தார்.

இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு கருப்பு நாள் எனவும், இந்த நாளை கொண்டு வந்தவர்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர் என்றும் சாடினார். அவர்கள் இன்று மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் என்று கூறிய அவர், இன்று சுதந்திரம் பற்றி அவதூறாக பேசி அரசின் மீது குற்ற சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...