பொள்ளாச்சி அருகே பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதாக தந்தை புகார் - ஜாமீனில் வந்த மகன் கைது!

பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் ராயல் சிட்டி பகுதியில் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் ராயல் சிட்டி பகுதியில் பணம் கேட்டு அடித்து துன்புறுத்துவதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவந்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ரங்கசமுத்திரம் ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. தனியார் கம்பெனியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் தியாகராஜன் (38). இவர் கடந்த ஜனவரி மாதம் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கடந்த ஜூன் 16ம் தேதி ஜாமீனில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் முத்துச்சாமி தன்னை தனது மகன் தியாகராஜன் பணம் கேட்டு தினமும் தாக்கி துன்புறுத்துவதாக கோட்டூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து தியாகராஜனை அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...