பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஆழியார் காவல் நிலையத்தில் 22ம் தேதி புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று சிறுமியை ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த உட்டம் (27) என்பவர் சிறுமியுடன் ஆழியார் காவல் நிலையத்திற்கு திருமணம் செய்து வைக்க கோரி சென்றுள்ளார். இந்நிலையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற மேற்கு வங்க வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஆழியார் காவல் நிலையத்தில் 22ம் தேதி புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று சிறுமியை ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த உட்டம் (27) என்பவர் சிறுமியுடன் ஆழியார் காவல் நிலையத்திற்கு திருமணம் செய்து வைக்க கோரி சென்றுள்ளார். இந்நிலையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற மேற்கு வங்க வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.