பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது!

பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஆழியார் காவல் நிலையத்தில் 22ம் தேதி புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று சிறுமியை ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த உட்டம் (27) என்பவர் சிறுமியுடன் ஆழியார் காவல் நிலையத்திற்கு திருமணம் செய்து வைக்க கோரி சென்றுள்ளார். இந்நிலையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற மேற்கு வங்க வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...