போலி பட்டா கொடுத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்..!

ஆதிதிராவிடர் நலத்துறை பெயரில் போலி பட்டா தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய் பணங்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: போலி பட்டா கொடுத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்க உள்ளதாக தெரிவித்து கோவை இருகூர் காமாட்சி புரத்தில் வசித்து வரும் வினோத், சாரதாமணி, சூலூரை சேர்ந்த மணி மற்றும் மணிகண்டன் ஆகியோர்கள் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் கவுண்டம்பாளையம், கோல்டு வின்ஸ், மலுமிச்சம்பட்டி, ஒண்டிபுதூர், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதிதிராவிட மக்களை ஏமாற்றி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் கொடுப்பதாக ஒவ்வொரு நபரிடமும் 50,000, 1-லட்சம், 2-லட்சம் என பலரிடம் வசூல் செய்துள்ளனர்.



மேலும், மோசடியாளர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் ஆக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் தமிழக அரசின் இலட்சனை மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பெயர் அடங்கிய போலியான டோக்கன் கொடுத்துள்ளனர். அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் ஆதித்தமிழர் நல மையம் என்ற பெயரில் போலியான பட்டா கொடுத்துள்ளனர்.



இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை தராமல் மோசடி செய்ததை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.



மேலும், இந்த புகார் மனுவில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதற்கு உள்ளான சான்றிதழ்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த இந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி ஆவணங்கள் தயாரித்த அவர்களை கைது செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...