ஆதிதிராவிடர் நலத்துறை பெயரில் போலி பட்டா தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய் பணங்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: போலி பட்டா கொடுத்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்க உள்ளதாக தெரிவித்து கோவை இருகூர் காமாட்சி புரத்தில் வசித்து வரும் வினோத், சாரதாமணி, சூலூரை சேர்ந்த மணி மற்றும் மணிகண்டன் ஆகியோர்கள் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கவுண்டம்பாளையம், கோல்டு வின்ஸ், மலுமிச்சம்பட்டி, ஒண்டிபுதூர், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதிதிராவிட மக்களை ஏமாற்றி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் கொடுப்பதாக ஒவ்வொரு நபரிடமும் 50,000, 1-லட்சம், 2-லட்சம் என பலரிடம் வசூல் செய்துள்ளனர்.

மேலும், மோசடியாளர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் ஆக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் தமிழக அரசின் இலட்சனை மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பெயர் அடங்கிய போலியான டோக்கன் கொடுத்துள்ளனர். அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் ஆதித்தமிழர் நல மையம் என்ற பெயரில் போலியான பட்டா கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை தராமல் மோசடி செய்ததை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும், இந்த புகார் மனுவில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதற்கு உள்ளான சான்றிதழ்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த இந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி ஆவணங்கள் தயாரித்த அவர்களை கைது செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்க உள்ளதாக தெரிவித்து கோவை இருகூர் காமாட்சி புரத்தில் வசித்து வரும் வினோத், சாரதாமணி, சூலூரை சேர்ந்த மணி மற்றும் மணிகண்டன் ஆகியோர்கள் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கவுண்டம்பாளையம், கோல்டு வின்ஸ், மலுமிச்சம்பட்டி, ஒண்டிபுதூர், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதிதிராவிட மக்களை ஏமாற்றி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் கொடுப்பதாக ஒவ்வொரு நபரிடமும் 50,000, 1-லட்சம், 2-லட்சம் என பலரிடம் வசூல் செய்துள்ளனர்.
மேலும், மோசடியாளர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரம் ஆக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் தமிழக அரசின் இலட்சனை மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பெயர் அடங்கிய போலியான டோக்கன் கொடுத்துள்ளனர். அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் ஆதித்தமிழர் நல மையம் என்ற பெயரில் போலியான பட்டா கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை தராமல் மோசடி செய்ததை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும், இந்த புகார் மனுவில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதற்கு உள்ளான சான்றிதழ்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த இந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி ஆவணங்கள் தயாரித்த அவர்களை கைது செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.