கோவை ராமநாதபுரம் மேம்பாலம் 40-அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர் சுயநினைவு இழப்பு - மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் ஆய்வு….!

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சாலை தடுப்பில் மோதி 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சாலை தடுப்பில் மோதி 40-அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாலம் திறப்பட்ட முதல் நாளே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார்.

இதையடுத்து, மேம்பாலம் முழுவதும் இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள், மற்றும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 5.30-மணியளவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஹரிகரன் (24) என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் சுங்கம் செல்லும் பாதையில் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் மேம்பால தடுப்பின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகரன் சுமார் 40-அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், தலை மற்றும் இரண்டு கால்களில் முறிவு ஏற்பட்டு, சுயநினைவு இழந்தார். இதையடுத்து, அங்கிருந்த அவரை மீட்டு கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் மற்றும் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட போலீசார் மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.



மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ஒரு வழி சாலையாக உள்ள இந்த பாதையில் சிலர் எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதாகவும், இதனாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துணை ஆணையாளர் தெரிவித்தார். மேலும், வேகத்தடைகள் அமைக்கவும், ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று இரவு வேகத்தடை ஒளிரும் விளக்குகளுடன் பொருத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...