கோவை பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் சீனிவாசபுரம் ரயில்வே பாலத்தின் அடியில் அரசு பேருந்து சுவற்றில் மோதி விபத்து..!

எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் முயன்ற போது இடது பக்கம் இருந்த பாலத்தின் சுவற்றில் மோதியதில் பேருந்தில் இருந்த ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.


கோவை:கோவை பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் சீனிவாசபுரம் ரயில்வே பாலத்தின் அடியில் அரசு பேருந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

சர்க்கார்பதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து சீனிவாசபுரம் ரயில்வே மேம்பாலம் அடியில் வந்துகொண்டிருந்தது. ஓட்டுனர் சுரேஷ்குமார் பேருந்தை இயக்கி வந்தார். அப்போது திருச்சியில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி முன்னால் வந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது.

லாரியை முஹமது சாலி என்பவர் இயக்கி வந்தார். அப்போது எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் முயன்ற போது இடது பக்கமிருந்த பாலத்தின் சுவற்றில் பேருந்து மோதியது.



இதில் பேருந்தில் இருந்த ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரியின் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் லாவகமாக பேருந்தைஇயக்கியதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக சிறிது நேரம் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணியில்ஈடுபட்டு, போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...