கோவையில் காவல் துறையால் “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” துவக்கம்: பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் என எஸ்.பி.நம்பிக்கை..!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தைகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார். மேலும் அதை தொடர்ந்துபொதுமக்கள் தவறவிட்டு 100-க்கும் மேற்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறும் போது, கடந்த 3- மாத காலத்தில் 235-செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், பள்ளி குழந்தைகளுக்காக“ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டம் கோவை மாவட்ட காவல் துறையால் துவங்கப்பட்டுள்ளது எனவும், இத்திட்டம் குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்பை அவர்களுக்கே தெரியபடுத்தி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம்துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



இதனை உட்கோட்ட வாரியாக பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று, முதலில் ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரிய படுத்த உள்ளதாகவும், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வந்தால் அதை எவ்வாறு காவல்துறையினரிடம் அனுகி தீர்வு காணலாம் என எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 997-பள்ளிகளுக்கும் சென்று இந்த விழிப்புணர்வு திட்டம் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு எடுத்து கூற உள்ளதாகவும் கூறினார். இதற்காக 10-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 10-வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து 10-வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு “சரியாக தொடுதல்” “தவறான தொடுதல்” போன்ற அடிப்படைகள் குறித்தும், அவ்வாறு யாரேனும் அணுகினால் யாரை அணுக வேண்டும் என தெரிவிக்க உள்ளோம், எனவும் 10- வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக சரியான அனுகுமுறைகள் போன்றவை குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக கடந்த 2-மாதங்களாக தனிப்படை இதற்காக பணியாற்றி உள்ளதாக கூறினார். மேலும், தற்போதைய காலத்தில் குழந்தைகளுக்கு இப்படியான பிரச்சனை அவர்களுக்கு நெருக்கமானவர்களால் தான் அதிகம் நிகழ்வதாகவும் கூறினார். வருகிற திங்கட்கிழமை முதல் இந்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி தொடங்கஉள்ளதாக கூறினார்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...