கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.
கோவை: கோவையில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தைகோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக “ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார். மேலும் அதை தொடர்ந்துபொதுமக்கள் தவறவிட்டு 100-க்கும் மேற்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறும் போது, கடந்த 3- மாத காலத்தில் 235-செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், பள்ளி குழந்தைகளுக்காக“ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்” என்ற விழிப்புணர்வு திட்டம் கோவை மாவட்ட காவல் துறையால் துவங்கப்பட்டுள்ளது எனவும், இத்திட்டம் குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்பை அவர்களுக்கே தெரியபடுத்தி, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம்துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனை உட்கோட்ட வாரியாக பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று, முதலில் ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரிய படுத்த உள்ளதாகவும், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வந்தால் அதை எவ்வாறு காவல்துறையினரிடம் அனுகி தீர்வு காணலாம் என எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள 997-பள்ளிகளுக்கும் சென்று இந்த விழிப்புணர்வு திட்டம் குறித்து பள்ளி குழந்தைகளுக்கு எடுத்து கூற உள்ளதாகவும் கூறினார். இதற்காக 10-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 10-வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து 10-வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு “சரியாக தொடுதல்” “தவறான தொடுதல்” போன்ற அடிப்படைகள் குறித்தும், அவ்வாறு யாரேனும் அணுகினால் யாரை அணுக வேண்டும் என தெரிவிக்க உள்ளோம், எனவும் 10- வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக சரியான அனுகுமுறைகள் போன்றவை குறித்தும் எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதற்காக கடந்த 2-மாதங்களாக தனிப்படை இதற்காக பணியாற்றி உள்ளதாக கூறினார். மேலும், தற்போதைய காலத்தில் குழந்தைகளுக்கு இப்படியான பிரச்சனை அவர்களுக்கு நெருக்கமானவர்களால் தான் அதிகம் நிகழ்வதாகவும் கூறினார். வருகிற திங்கட்கிழமை முதல் இந்த விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி தொடங்கஉள்ளதாக கூறினார்.