மேம்பால பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் குழாய் உயர் மின்னழுத்த கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகளை தாமதிக்காமல் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 115-கோடி மதிப்பில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் குழாய் உயர் மின்னழுத்த கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகளை தாமதிக்காமல் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, மின்சாரத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார்.
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 115-கோடி மதிப்பில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பால பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடித்து, குடிநீர் குழாய் உயர் மின்னழுத்த கம்பிகள் மாற்றி அமைக்கும் பணிகளை தாமதிக்காமல் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை, மின்சாரத்துறை, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.