கடந்த 10-ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆசிரமத்தின் உரிமம் புதுப்பிக்க படாமல் முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 18-குழந்தைகள் மாநகரிலுள்ள சத்குரு சேவா என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோவை: கோவையில் உரிமம் புதுப்பிக்காத ஆசிரமத்திலிருந்து 18-குழந்தைகள் வேறு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மதுக்கரை - சீராபாளையம் செல்லும் சாலையில் உள்ள அன்னை நகரில் புற்றிடகொண்டீஸ்வரன் எனும் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
கோவை தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கிருஷ்ணசாமி ஆசிரமத்தின் தலைவராக உள்ளார். இந்த ஆசிரமத்தில் 18 குழந்தைகள் தங்கியிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (54) வார்டனாக உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆசிரமத்தின் உரிமம் புதுப்பிக்க படாமல் உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், பவித்ராதேவி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 18 குழந்தைகள் மாநகரிலுள்ள சத்குரு சேவா என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மதுக்கரை - சீராபாளையம் செல்லும் சாலையில் உள்ள அன்னை நகரில் புற்றிடகொண்டீஸ்வரன் எனும் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
கோவை தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கிருஷ்ணசாமி ஆசிரமத்தின் தலைவராக உள்ளார். இந்த ஆசிரமத்தில் 18 குழந்தைகள் தங்கியிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (54) வார்டனாக உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக செயல்படும் இந்த ஆசிரமத்தின் உரிமம் புதுப்பிக்க படாமல் உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், பவித்ராதேவி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 18 குழந்தைகள் மாநகரிலுள்ள சத்குரு சேவா என்ற ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.