'டாஸ்மாக்' வேண்டாம்.. மதுக்கடைக்கு எதிராக சோமனூர் சாலையில் ஒன்றிணைந்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

ஒரு சில நாளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ், பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து சோமனூர் சாலையில் மதுக்கடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை: சோமனூர் சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக ஒன்றிணைந்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் இருந்து சோமனூர் செல்லும் சாலையில்கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் மேற்கொண்ட நிலையில் அங்கிருந்த டாஸ்மாக் கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் நல மருத்துவமனை பள்ளிகள், தேவாலயம் அமைந்துள்ள இடத்தில்டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து ஒரு சில நாளில் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ், பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்துசோமனூர் சாலையில் மதுக்கடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மதுக்கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தேவாலயம், குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நிறைந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் எனவும், ஏற்கனவே பல கட்ட போராட்டம் நடத்தி மதுக்கடை அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் மதுக்கடை கொண்டுவந்தால் சட்டவிரோத சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும், இப்பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு தடுத்த நிறுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் அடுத்த கட்டமாக மதுக்கடை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...