இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, வழக்கு பதிவு செய்து உயிர் இழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அரசு மருத்துவமனை புதியகட்டிடத்தின் பின்புறம் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில், கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிழக்கு போலீசார் அங்கு சென்று அசைவின்றி கிடந்த இளைஞரை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.
அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்ததில், அவர் ஆத்து பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்த கந்தகுமார்(38) என்பதும், மர ஆசாரியாக பணியாற்றி வந்ததும், மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, வழக்கு பதிவு செய்து உயிர் இழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அரசு மருத்துவமனை புதியகட்டிடத்தின் பின்புறம் இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில், கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிழக்கு போலீசார் அங்கு சென்று அசைவின்றி கிடந்த இளைஞரை மருத்துவரிடம் கொண்டு சென்றனர்.
அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடைமைகளை சோதனை செய்து பார்த்ததில், அவர் ஆத்து பொள்ளாச்சி கிராமத்தைச் சேர்ந்த கந்தகுமார்(38) என்பதும், மர ஆசாரியாக பணியாற்றி வந்ததும், மேலும் இவர் மீது காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து, வழக்கு பதிவு செய்து உயிர் இழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.