சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ராம பட்டினத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9-பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டிணம்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த,கருப்புசாமி(42), செல்வராஜ்(45), சிவா(23), நாகராஜ்(35), ஆனந்தன்(44), ஆறுச்சாமி(44), சுப்பிரமணி(23), சுபாஷ்(23), செல்வராஜ்(31), சக்திவேல்(36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ.16-ஆயிரத்து 800-பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டிணம்பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த,கருப்புசாமி(42), செல்வராஜ்(45), சிவா(23), நாகராஜ்(35), ஆனந்தன்(44), ஆறுச்சாமி(44), சுப்பிரமணி(23), சுபாஷ்(23), செல்வராஜ்(31), சக்திவேல்(36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ.16-ஆயிரத்து 800-பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.