திருமணம் ஆகாத அந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. அந்த பெண் உடல் ரீதியாக சோர்வுடன் இருந்ததால், அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அவரை காப்பகத்தில் சேர்த்தனர்.
கோவை: கோவை பேரூர் அருகே பாதியளவு கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும், அவருடன் ஒரு ஆண் வசித்து வருவதாகவும், அந்த பெண் பாலியல் ரீதியாக துண்புறுத்தப்படுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் தங்கமணி தலைமையிலான அதிகாரிகள் அந்த வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புகாரில் தெரிவிக்கப்பட்டது போல, பாதி கட்டி முடிக்கப்பட்ட சிறிய வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இருந்துள்ளார்.
அங்குச் சென்ற அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, தற்போது இருக்கும் அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களாக அந்த பெண் வசித்து வருவதாகவும், கடந்த 2018 – 2020 ஆண்டுக்குள் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு மூன்றாவது குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை, உக்கடம் பகுதியில் உள்ள காப்பாகத்தில் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகாத நிலையில், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது யார்? அவருடன் வசித்து வந்தவர் யார்? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் உடல் ரீதியாக சோர்வுடன் இருந்ததால் அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், நல்லாம்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் தங்கமணி தலைமையிலான அதிகாரிகள் அந்த வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புகாரில் தெரிவிக்கப்பட்டது போல, பாதி கட்டி முடிக்கப்பட்ட சிறிய வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இருந்துள்ளார்.
அங்குச் சென்ற அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, தற்போது இருக்கும் அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களாக அந்த பெண் வசித்து வருவதாகவும், கடந்த 2018 – 2020 ஆண்டுக்குள் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு மூன்றாவது குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை, உக்கடம் பகுதியில் உள்ள காப்பாகத்தில் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகாத நிலையில், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது யார்? அவருடன் வசித்து வந்தவர் யார்? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் உடல் ரீதியாக சோர்வுடன் இருந்ததால் அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், நல்லாம்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.