கோவையில் திருமணம் ஆகாமல் 3 குழந்தைகளுக்கு தாயான மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? சமூக நலத்துறையினர் விசாரணை….!

திருமணம் ஆகாத அந்த பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. அந்த பெண் உடல் ரீதியாக சோர்வுடன் இருந்ததால், அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் அவரை காப்பகத்தில் சேர்த்தனர்.


கோவை: கோவை பேரூர் அருகே பாதியளவு கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும், அவருடன் ஒரு ஆண் வசித்து வருவதாகவும், அந்த பெண் பாலியல் ரீதியாக துண்புறுத்தப்படுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் தங்கமணி தலைமையிலான அதிகாரிகள் அந்த வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புகாரில் தெரிவிக்கப்பட்டது போல, பாதி கட்டி முடிக்கப்பட்ட சிறிய வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இருந்துள்ளார்.

அங்குச் சென்ற அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, தற்போது இருக்கும் அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களாக அந்த பெண் வசித்து வருவதாகவும், கடந்த 2018 – 2020 ஆண்டுக்குள் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு மூன்றாவது குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை, உக்கடம் பகுதியில் உள்ள காப்பாகத்தில் இருப்பதும் தெரியவந்தது. அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகாத நிலையில், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது யார்? அவருடன் வசித்து வந்தவர் யார்? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் உடல் ரீதியாக சோர்வுடன் இருந்ததால் அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், நல்லாம்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பேரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...