அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 22 வயதுடைய இளைஞர்கள் மத்திய ராணுவத்தில் இணையலாம் எனவும், நான்கு ஆண்டுகால பயிற்சிக்குப் பிறகு 25 சதவீதம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.



இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.



அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து குமரன் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



இதேபோல் திருப்பூர் ரயில் நிலையம் நுழைவு வாயில் முன்பு அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...