அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு: திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 22 வயதுடைய இளைஞர்கள் மத்திய ராணுவத்தில் இணையலாம் எனவும், நான்கு ஆண்டுகால பயிற்சிக்குப் பிறகு 25 சதவீதம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.



இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.



அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து குமரன் சாலையில் அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.



இதேபோல் திருப்பூர் ரயில் நிலையம் நுழைவு வாயில் முன்பு அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...