கோவையில் தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டியினை பாமக அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்


கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத் தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகள் இன்று துவங்கின. 

கோயமுத்தூர் இறகுப்பந்து சங்கமும், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கமும் இணைந்து நடத்தும் இப்போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளன. 



இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்து, ஒரு மாணவருடன் அன்புமணி இராமதாஸ் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இறகுப்பந்து போட்டிகளில் பல திறமையான வீரர்கள் இருந்த போதும், உள் அரங்குகள், பயிற்சி, உடற்தகுதி ஆகியவை மேம்படுத்த முறையான வசதிகள் இல்லை என தெரிவித்தார். 

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் உள் கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இறகுப்பந்து போட்டிகள் தொடர்பான விபரங்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருவதால் வெளிப்படை தன்மை நிலவி வருவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக திறமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இறகுபந்து உள் அரங்கள் கட்டமைப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அமைக்கவும், சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்க நிலம் ஒதுக்கவும் கோரி, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...