கோவையில் தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டியினை பாமக அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்


கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத் தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகள் இன்று துவங்கின. 

கோயமுத்தூர் இறகுப்பந்து சங்கமும், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கமும் இணைந்து நடத்தும் இப்போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளன. 



இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்து, ஒரு மாணவருடன் அன்புமணி இராமதாஸ் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இறகுப்பந்து போட்டிகளில் பல திறமையான வீரர்கள் இருந்த போதும், உள் அரங்குகள், பயிற்சி, உடற்தகுதி ஆகியவை மேம்படுத்த முறையான வசதிகள் இல்லை என தெரிவித்தார். 

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் உள் கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இறகுப்பந்து போட்டிகள் தொடர்பான விபரங்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருவதால் வெளிப்படை தன்மை நிலவி வருவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக திறமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இறகுபந்து உள் அரங்கள் கட்டமைப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அமைக்கவும், சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்க நிலம் ஒதுக்கவும் கோரி, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...