கோவையில் தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டியினை பாமக அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்


கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத் தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகள் இன்று துவங்கின. 

கோயமுத்தூர் இறகுப்பந்து சங்கமும், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கமும் இணைந்து நடத்தும் இப்போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளன. 



இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்து, ஒரு மாணவருடன் அன்புமணி இராமதாஸ் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இறகுப்பந்து போட்டிகளில் பல திறமையான வீரர்கள் இருந்த போதும், உள் அரங்குகள், பயிற்சி, உடற்தகுதி ஆகியவை மேம்படுத்த முறையான வசதிகள் இல்லை என தெரிவித்தார். 

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் உள் கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இறகுப்பந்து போட்டிகள் தொடர்பான விபரங்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருவதால் வெளிப்படை தன்மை நிலவி வருவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக திறமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இறகுபந்து உள் அரங்கள் கட்டமைப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அமைக்கவும், சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்க நிலம் ஒதுக்கவும் கோரி, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...