அக்னிபாத் திட்டம் எதிர்ப்பு: கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது..!

இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட , முயன்றதால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.



கோவை: சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளஅக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அக்னிபாத் திட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, போலீசார் அமைத்திருந்த இரும்புத் தடுப்புகளை மீறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றதால், போலீசார் மற்றும் இளைஞர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து தடையை மீறி உள்ளே செல்ல முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.



இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ் கூறும்போது :மத்திய அரசு ராணுவ துறையை ஒப்பந்த அடிப்படையில் விட முயல்கிறது. ராணுவத் துறையில் தான் பணி பாதுகாப்பு உள்ளது. ஆனால், அந்தத் துறையிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பணிக்குச் செல்லும் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. மேலும், ராணுவத்தில் பாதுகாப்பு பணியில் அனுபவம் மிகுந்த வீரர்கள் இருக்க வேண்டிய சூழலில், அனுபவம் இல்லாதவர்களை இந்திய விமானப்படை, கப்பல்படைஆகியவற்றில் பணியாற்ற வைப்பது ஆபத்தானது", என்று தெரிவித்தார்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...