ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ஜூலை 9-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
கிணத்துக்கடவில் நம்பர்.10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர், குருநெல்லிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கும், ஆனைமலையில் வாழைக்கொம்பு நாகூர் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி தெற்கில் சிங்காநல்லூர் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி வடக்கில் வடக்கிப்பாளையம் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூரில் பேரூர் செட்டிபாளையம் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக ஜூலை 9-ம் தேதி காலை 7-மணி முதல் 6-மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ஆம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் இருபத்தி ஏழாம் தேதி மாலை 5-மணி வரை நடைபெறும் எனவும், வேட்புமனு ஆய்வு செய்தல் பணி ஜூன் 28-ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவது ஜூன் 30-ம் தேதி பிற்பகல் 3-மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் 11-வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும், ஐந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
கிணத்துக்கடவில் நம்பர்.10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர், குருநெல்லிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதிவுக்கும், ஆனைமலையில் வாழைக்கொம்பு நாகூர் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி தெற்கில் சிங்காநல்லூர் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், பொள்ளாச்சி வடக்கில் வடக்கிப்பாளையம் கிராம ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூரில் பேரூர் செட்டிபாளையம் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக ஜூலை 9-ம் தேதி காலை 7-மணி முதல் 6-மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ஆம் தேதி காலை 8-மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் இருபத்தி ஏழாம் தேதி மாலை 5-மணி வரை நடைபெறும் எனவும், வேட்புமனு ஆய்வு செய்தல் பணி ஜூன் 28-ம் தேதி நடைபெறும் எனவும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவது ஜூன் 30-ம் தேதி பிற்பகல் 3-மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் 11-வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும், ஐந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.