பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் பிளஸ்-2 தேர்வில் தோல்வி-மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

கோவையில் பொள்ளாச்சி அருகிலுள்ள கோட்டூரில் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் பொள்ளாச்சி அருகிலுள்ள கோட்டூரில் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைகாரன்புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி, ஈஸ்வரி தம்பதியரின் மகன் உதயகுமார்(18). இவர் கோட்டூரில் உள்ள தாத்தா முத்துசாமி வீட்டில் தங்கி கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் உதயகுமார் வேதியியல் பாடப்பிரிவில் மட்டும் தேர்ச்சி பெற்று மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால், தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் கோட்டூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...